Sunday, April 26, 2020

வேள்பாரியும் நானும் 5

வேள்பாரியும் நானும் 4
பறம்பு நாட்டின் வட எல்லையில்  கோளூர்ச்சாத்தன் கூட வந்த இருவரும் தோள்பட்டையைப் பொத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் அங்கிருந்த பனைமரத்தில் தொங்க விட்டுக்கொண்டிருந்தான் முடியன்…..
                                                  கதை முயடியவில்லை தொடரும்……..
வேள்பாரியும் நானும் 5
          இருள் விலகதாத கடைசி இரவின் இறுதியில் கபிலர் அசந்து தூங்கி கொண்டிருந்தார். வீரன் ஒருவரன் ஓடிவந்து “ பறம்பின் தலைவர் அழைக்கிறார்“ என்ற செய்தியுடன் முன்னால் நின்றான்.பாரியோடு கபிலரும் எவ்வியூரின் நடுவில் சென்று கொண்ருந்தனர்.பாரியிடமிருந்து வரும் வாசனையை முகர்ந்து கொண்டே உச்சிப்பறையை அடைந்தனர். இருவரும்.. தாழைப்பூவின் மணம், காய்ந்த ஆண் தாழைப்பூவின் இதழ்களுக்கு பூச்சிகளும் அண்டாது எனவே எப்போதும் எங்கள் உடன் இருக்கும். என்றான் பாரி.
          தொலைவில் தேர் ஒன்று செல்ல? கபிலர் பாரியைப் பார்க்க“ பறம்புமலையின் அத்தனை செல்வங்களும் பாழிநகரில் சேமித்து வைக்க செல்கின்றன. இந்த பாழிநகரைப் பாதுகாக்கும் பொறுப்பு  எங்களுடையது. என்றான் பாரி.
          இருகுன்றுகளுக்கும் இடையில் தீபம் ஏற்றியது போன்ற அற்புதக் காட்சியைக் கண்டுகொணுடிருந்தார் கபிலர். இரு பிளவுகளின் வழியே வெளிவந்த சூரியனின் ஒளி நேராக கபிலரின் மார்பில் பட கபிலர் இருகைகளையும் கூப்பி வணங்கினார். கபிலரின் கைகூப்பு காட்சியின் நிழல் எவ்வியூர் எங்கும் பரவியது. வானியல் பேராசான் திசைவேழர் இன்று நம்மோடு இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிக்கொண்டே கபிலர் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.
          திடீரென்று ஒரு கை அவரை மறித்தது. வலப்புறம் இடப்புறம் என்று மாறி மாறி மறித்தது. யாரம்மா நீ? கபிலர் கேட்க. மறித்தவளோ ” பாரியிடம் நட்பு கொள்ள தகுதி உண்டோ உம்மிடம்? என்று அதிரடியாகக் கேட்டாள் அவள்.
          கபிலர் அதிர்ந்து போனார். ஏனம்மா இப்படி கேட்கிறாய்?  எவ்வளவு பதற்றமான சூழ்நிலை வந்தாலும் கார்கால இரவுகளில் பாழிநகருக்குப் பாரி செல்லமாட்டான் தெரியுமா உமக்கு.
கபிலரிடம் பதிலில்லை.. கேள்விதான் கேக்கவில்லையே!... கபிலர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். கார்காலத்து இரவுகளில் மான்கள் இணைசேரும் தன் தேரின் ஒலி அதைக் கலைத்துவிடக்கூடாது என்பதால் தேரில் வரமாட்டான்.. பாரி.. ஆனால் உமது செயல் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது.
யான் செய்த பிழை என்ன  மகளே? ..
பூக்காடான என் காதலில் புயலை வீசச் செய்ததுதான் நீங்கள் செய்த பிழை. புரியும்படி சொல்.
உங்களால் தான் அவன் புகழின் உச்சியில் இருக்கிறான்.. என் கைகள் தழுவிக்கிடந்த  தோளில் இப்போது பாரியின் கைககள் தழுவுகின்றன. என் காதல் புகழலல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
கபிலருக்கு புரிந்தது. அவனின் காதலன் நம் செயலால் அவளிடமிருந்து கொஞ்சம் பிரிந்து பாரியிடம் ஒட்டிக்கொண்டான் போல.
நீ யாரைச் சொல்கிறாய்? உன் காதலன் யார்?
நீலன்.
நீலனின் பெருமையைக் கண்டு நீ மகிழத்தானே வேண்டும்.
எங்கள் குன்று எவ்வளவு வலிமை வாய்ந்தது தெரியுமா? யார் கண் பட்டதோ தெரியவில்லை.. அன்னொரு நாள் ஒரு தேர் வந்து நின்றது. என் மடி மீது கிடந்த நீலன் யாரோ ஒருவர் வேட்டுவன் பாறையில் கால் பதிக்கிறார். என்றேன். நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல நானே சொல்லி மாட்டிக்கொண்டேன். அன்று அது யார் என்று பார்க்கப்போனவன் வரவில்லை. வந்திருப்பவருக்கு காலில் அடிபட்டதால் நான் அவரை அழைத்துக் கொண்டு எவ்வியூர் செல்கிறேன். நீயுமு் வந்து சேர் என்று சொல்லிச் சென்றான்.
கபிலர் தன் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதோடு விட்டேனா? கால் ஒடிந்த ஒருவர் புலிவால் குகையில் இருப்பதைக் கேள்விபட்ட பாரி அக்குகைக்கே சென்று விட்டான். ஊரே நீலனின் புகழைத்தான் பாடுகின்றன. ஆனால் என் உதட்டுக்கு ஈடாகுமா? இவ்வுலகு? என்ன செய்யலாம் அவனை?
என்னிடமும் ஒருவன் இருக்கிறான்.. மயிலா… மயிலா என்று புலம்புகிறான். எனக்கு தெரியாமல் மலிலை மலரைப் பறித்துக் கொண்டு அவளைச் சந்திக்க புறப்பட்டு விட்டான். மயிலாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.. இன்னொரு நாளையும் இழக்க விரும்பாமல் ஓடோடி போனாள்.
மறுநாள் பாரியோடு கபிலர் பேசுகையில் நேற்று எவ்வியூரின் உச்சியில் இருந்தபோது இவ்வூரைச் சுற்றி கோட்டைகள் இல்லையே என்று நினைத்தேன் என்றார்.
பாரியோ.. கோட்டைகள் தான் இல்லை.. ஆனால் தாவரங்களும்… செடி கொடிகளும் தான் எங்களுக்கான பாதுகாப்பு அரண்கள். அதிலுள் ளஒரு மரம் யானைகள் கூட்டத்தையே விரட்டி அடிக்க கூடிய மணத்தை உடையது.
அது என்ன மரம்,
ஏழிலைப்பாலை
அந்த மரத்தின் வாசனையை நுகர்ந்தால் யானைகள் அலறி அடித்துக் கொண்டு ஓடும்.அந்த மரத்தின் வாசனையில் இன்னொரு அற்புதமும் இருக்கிறது.. காமத்தைத் தூண்டும் வசியம் அதனிடம் இருக்கிறது.. அதனால் தான் திசைக்கு ஒரு மரம் என்று விட்டு வைத்திருக்கிறோம்.
குலநாகினிகள் அடக்கும் நாகப்பச்சை வேலியும் பறம்பு மலைக்கு எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.
குலநாகினிகள் கூட்டம் வந்தது. அவர்களின் சத்தம் காட்டையே அதிரச் செய்தது…கொற்றவை விழா துவங்க போகிறது… அதன் தொடக்கம் தான் குலநாகினிகளின் வருகை...
இதோ கொற்றவை விழா தொடங்க இருக்கிறது….
கபலிரின் ஐயம் வெளிவந்தது.. கொற்றவை தெய்வம் பாலை நிலத்துக்கு உரியதுதானே? ஏன் குறிஞ்சி நிலத்தில் கொண்டாடப்படுகிறது?

பாரி—மூவேந்தரகளின் எதிரியாக மாற வைத்த அந்நத விலங்கு தான் கொற்றவை விழாவை ஆர்பிக்கும்…

அந்த விலங்கு…. எது?...... காத்திருங்கள்…. விலங்கு வந்து கொண்டிருக்கிறது….

No comments:

Post a Comment