வேள்பாரியும் நானும் 2
பாரியின் கருணையை விடவா உங்கள் கடல் பெரியது?
300 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு சாதியும் இல்லை.. சதியும் இல்லை.. பிரிவும் இல்லை.. பேதமும் இல்லை..இயறகையோடு இயைந்த வாழ்வு. வேட்டையாடி உணவுகளை உண்டனர். இரண்டே பிரிவுதான்.. ஆண், பெண்.. இறைச்சிளை சுடு்டும் அவித்தும் சாப்பிட்டனர். இயற்கையின் அற்புதம் என்றால் எதிர்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்புதான். ஆண் பெண் இரண்டு ஒன்றையொன்று ஈர்த்துக்கொள்ளும் ஈர்ப்புச்சக்திகள். ஆனால் ஒன்றையொன்று புரிந்துகொள்ள முடிளாத பேரதிசயங்கள். இவையெல்லாம் ஆதிமனிதர்களின் அற்புத வாழ்வை அலங்கரித்துக்கொண்டிருந்த வேளையில்தான் பெரும் மாளிகைச்சரிய ஒற்றைச் செங்கல்காரணமாக இருப்பதுபோல சொத்தும் சொத்தின் மீதான மனிதகுலத்தின் ஆசையும் தனக்கான உடைமை, தன் குலத்திற்கான சேமிப்பு என்று சுயநலம் பெருக குலங்களின் ஒற்றுமை குலைய ஆரம்பித்திருக்கிறது.
ஆரம்பகால மனிதன் கால்நடைகளும் கால்நடை நிமித்தமுமே வாழ்க்கையை நடத்தியிருக்கிறான். பலவகையிலும் அவனுக்கு கால்நடைகள் உதவி செய்திருக்கின்றன. அதன் எண்ணிக்கையை அதிகபடுத்த ஆசைப்பட்டதின் விளைவு கால்நடைகளைக் கவர்தல், அதை மீட்டல் அதற்காக ஆயுதங்கள் ஏந்தல் என சண்டை சச்சரவுகள் ஆரம்பமாகி இறுதுியில் நிலத்தை அபகரிக்கும் போர்க்களங்கள் தோன்றியிருக்கின்றன. வெற்றிபெற்றவர்கள் மன்னர்களாக ஆவதும் தோற்றுப்போனவர்களைக் கொன்று குவித்தும் அடிமைகளாக மாற்றியும் ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றன. அவ்வேளையில்தான் எற்கும் சுற்றித்திரிந்து புகழ் பாடுமு் பாணர் கூட்டங்கள் உருவாகி வள்ளல்களைத் துட ஆரம்பித்திருக்கின்றன. வள்ளல்களும் பாணர்களின் வற்றாத குரல் வளத்தையும் ஆடல் திறனையும் கண்டு அளிள அள்ளி தந்திருக்கிறார்கள். அப்படித்தான் பாணர் கூட்டம் வள்ளல் பாரியைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறார்கள். பாரியைப்பற்றிப்பாடினாலே பசி பறந்து விடும் என்பது அவர்களின் பேச்சாகவே மாறிப்போய்விட பாரியின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.
மூவேந்தர்களின் காதுகளுக்கும் செல்கிறது பாரியின் புகழ்.. சும்மா இருப்பார்களா?
இந்நிலையில்தான் அறுக நாட்டை ஆளும் சிறுகுடி மன்னன் செம்பனின் மாளிகைக்கு தற்செயலாக வந்தார் கபிலர். கபிலர் போன்ற புலவர்களே வேறு அரச எல்லைக்குள் நுழையவும் பாடல் பாடவும் போரைத்தடுக்கவும் காரஒமாக இருந்திருக்கிறார்கள். கபிலர் பாரியின் பறம்பு நாட்டுக்குச் சென்றதில்லை. வேள்பாரிளைச் சந்தித்ததில்லை. புகழால் நிலைபெற்ற ஒன்றின் மீது எப்போதுமே இயல்பான கசப்புணர்வு தோன்றத்தான் செய்யும் அது கபிரலுக்கும் தோன்றியது. நடுநாட்டு அரசன் வெண்மானைக் காணச் சென்று கொண்டிருந்த கபிலர்தான் ஓய்வெடுக்க செம்பன் மாளிகை வந்திருக்கிறார்.
இருவரும் இணைந்து கள்ளை உண்டுகொண்டே பேசிக்கொண்டிருக்கையில் பாரியின் புகழ் கபிலரைச் சேர்கிறது. பாரி… பாரி.. பாரி… என்று செம்பன் சொல்ல சொல்ல கபிலர் இஅந்த பறம்புநாட்டுக்குள் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார். உடனே ஒரு தேரில் செம்பன் அவரை வேட்டுவன் பாறைக்கு அழைத்துச் செல்ல ஆணையிடுகிறான்.. அப்படித்தான் ஆதன் வந்து விட்டுச் செல்ல தனியே சென்ற கபிலரோடு நீலன் ஒட்டிக்கொண்டான். நீலன் காதலியைக் கண்டு வந்தவன். இப்போது கபிலரை பாரியின் தலைநகரான எவ்வியூருக்கு அழைத்துச் செல்கிறான். பச்சை மலைப்பாதையில்.
கபிலருக்கு காலில் தசைபிடிபபு ஏற்பட்டு வலியில் நடக்கமுடியாமல் போக விரைவாக பனையடிவாரத்திற்கு வரவைக்கிறான். ஒரு பனைமரத்தின் அடியில் உக்கார வைத்துவிட்டு ஓடிப்போய் சில பச்சிலைகளைப் பறித்து வந்து அகொடுத்து சாப்பிடச் சொல்கிறான் நீலன்.
சாப்பிட்ட கபிலர் ஏன் பனைமரத்தின் கீழ் உக்கார வைத்தாய்? பனைமரம் எங்களின் குலச்சின்னம். அதன்கீழு் நீங்கள் இருக்கும் வரையில் ஆபத்து உங்களை அண்டாது.
காரமலையில் அவர்கள் இருவரும் போய்க்கொண்டே இருக்கிறார்கள். கபிலருக்கு இப்போது நீலனிடம் கேள்வி கேட்க ஆசை.. ஏன் பனம் பூவை பறம்புநபட்டின் குலச்சின்னமாக தேர்ந்தெடுத்தீர்கள்?
நீலனோ” பனம் பூ வேறும் பூ அல்ல. அது ஆயதம்.. ஆயுதம் மட்மல்ல அது பேரழகு. எப்போதும் பனம்பூவின் குருத்தை இடுப்பில் வைத்திருப்பர். தேங்கியிருக்கும் நீரில் நஞ்சு இருக்கும் பட்சத்தில் அந்தப் பனம்பூ அந்த நஞ்சை விரட்டும். என்று நீலன் பனம்பூ ஆயுதம், அழகு , அருமருந்து என்று பனம்பூவின் பெருமைகளைப் பட்டியலிட பசுவிற்கு பின் செல்லும் கன்றுகுட்டி போல நீலன் பின்னால் கபிலர் செல்கிறார்.
நீங்கள் பாரியோடு சேர்ந்து கள் அருந்தும் நாள்தான் திருநாள் என்கிறான். நீலன் வழியில் பெரும்புற்கள் கிடக்கின்றன. கபிலர் தர்ப்பப்பை புல் என்கிறார். நீலனோ நாக்கறுத்தான் புல் என்கிறான். நாதக்கறுத்தான் புல்லின் கதை குறிஞ்சித்தலைவன் முருகன் வாழ்வில் நடந்த கதை.. என்று அக்கதையைக் கூற ஆரம்பிக்கிறான்.
பாரியின் தலைநகரின் பெயர் கொண்ட எவ்வியும் குறிஞ்சித்தலைவன் முருகனும் நெருங்கிய நண்பர்கள்.. இவர்கள் காட்டுப்பன்றி யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகற்களிடமிருந்து பயிர்களைக் காப்பாற்றுவதுதான் வேலை. ஒருநாள் இருவரும் செல்லும் வேளையில் ஏதேச்சையாக வள்ளியைச் சந்திக்கிறான். அடுத்தநாள் ஏற்கனவே பார்த்த இடத்தில் வள்ளி இல்லை. காடுமேடு சுத்தி அலைகிறான். காதல் வந்தபிறகு எங்கு காவல்காப்பது. வள்ளியைத் துடி அலைகிறான் ஒருநாள் அவளைக்கண்டு எவ்வி சொன்ன மரத்தின்கீழ் அவளிடம் பேச முயல்கிறான். அவள் தள்ளித்தள்ளி போகிறாள்.. முருகனே ஒருநாள் அவளை ஒரு மர்ததின் கீழு் அழைத்துச் சென்று மறுநாள் அதே மரத்திற்கு வரச்சொல்கிறான்.. முதல்நாள் பார்த்த மரம் மறுநாள் பூத்து குலுங்குகிறது.. எப்படி ஆச்சர்யத்துடன் பார்க்கிறாள்.. அதற்கு முருகன் பூவையரின் பாதம் பட்டு உன் பரிசம் பட்டதால் அம்மரம் பூத்துக் காட்சிதருகிறது. என்றபோது வள்ளிக்கு வெட்கத்தோடு முருகனின் மேல் காதலும் ஒட்டிக்கொள்கிறது. முருகனும் வள்ளியும் தங்குவதற்கு வேங்கை மரத்தில் பரண் அமைத்து தந்து, வள்ளி தந்த காதல் பரிசை வாங்கிக்கொண்டு எவ்வி ஊர் வருகிறான்.. இதற்கிடையில் வள்ளியைக் காணமால் அவ்வூர் மக்கள் தேடிவர எவ்வி ஊர்மக்களும் சேர்ந்து வள்ளியைத்துட முற்பட.. எவ்வி தவிக்க….. இப்போது எவ்வி வள்ளி தந்த காதலின் பரிசை திறந்து அதைப் பழச்சாறாக்கி எல்லாருக்கும் கொடுக்கிறான். பழச்சாறு மயக்குகிறது அவர்களை. குலமகள் வள்ளியைத் தேடி வந்தவர்களுக்கு வள்ளி தந்த பூண்டின் சாற்றைத் தந்து அவர்களை மயக்கி எவ்வவியும் மயங்க அப்போது சிந்தியது பச்சாறு.. அச்சாறு அருகில் இருந்த புற்களின் மேல் பட.. இந்த வாசனையைக் கண்டு பாம்புகள் படையெடுத்து வந்து அப்புற்களைத்தின்ன புற்களின் நுனி பாம்புகளின் நாக்கு அறுக்க இப்புற்களுக்கு பெயர் நாக்கறுத்தான் புற்களானது..
தான் நினைத்த தரப்பபை புற்களுக்கு நாக்கறுத்தான்புல் என்ற பெயர்வந்த கதையைக் கேட்ட கபிலர் நீலனை ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது கபிலர் இருந்த இடம் வேறு.. நான் எங்கிருக்கிறேன்? நீங்கள் வரவேண்டி இடத்துக்கு வந்துவிட்டீர்கள் என்கிறான் நீலன்.. எப்படி? இது கபிலர்.. நீங்கள் நடக்க முடியாமல் இருக்கும்போது தனைமயக்கி மூலிகைதந்து உங்களை சிறிது மயக்கி இங்கு அழைத்து வந்தேன். இல்லையென்றால் உங்களால் வலி நடந்திருக்கமுடியாது. என்றான் நீலன். கபிலர் முருகனும் வள்ளியும் கிடைத்தார்களா என்று கேட்க… நீலன் அவர்கள் அந்த வேங்கை மரத்தடியில் இருக்கிறார்கள் எனப்து எங்கள் நம்பிக்கை.. அந்த முருகனுக்கு பிறகு குலத்தலைவன் ஆனான் எவ்வி. வள்ளியின் குலமான கொடிக்குலமும் முருகனின் னுலமான வேடர்குலமும் இணைந்தன. அவனது வழித்துான்றல்தான் வேளிர்குலம்.. அந்தவேளிர்குலத்தலைவன் தான் வேள்பாரி… வேல்முருகனிலிருந்து வேள்பாரி வரை கதையைக் கேட்ட கபிலருக்கு மீண்டும் தனைமயக்கி மூலிகையைச் சாப்பிடது போலிருந்தது.
No comments:
Post a Comment