Friday, October 5, 2018

வகுப்பு 9 சிறுபஞ்சமூலம்....


வகுப்பு 9 கவிதைப்பேழை
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். இது போன்றே வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை, இவற்றின் வேர்களைப் பெரும் பஞ்சமூலம் என்பர். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.
ஆசிரியாகுறிப்பு
     இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். காரி என்பதுவே இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழில் பற்றி வந்த பெயராகலாம். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இவர் சைன சமயத்தார் என்பது இந் நூலின் காப்புச் செய்யுளால் அறியலாகும். பாயிரச் செய்யுளிலிருந்து இவர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது தெரிய வருகிறது. இந்த ஆசிரியரிடம் கல்வி பயின்றோருள் மற்றொருவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களின் ஆசிரியராகிய கணிமேதாவியார். இவரும் மாக்காயனாரின் ஊராகிய மதுரையைச் சார்ந்தவராதல் கூடும். இவர் பஞ்ச தந்திரக் கதையுள் வரும், மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத் தீர்த்த கங்கைக் கரையில் உள்ள பூனைக் கதையை, 'உறுதவ மேல் கங்கை கரைப் பூசை போறல் கடை' (100) என்று சுட்டியுள்ளார். இதனால் பஞ்ச தந்திரம் தமிழில் பெருக வழங்கிய காலத்தை ஒட்டி இந்நூலாசிரியர் வாழ்ந்தனர் என்று எண்ணவும் இடமுண்டு.

     இந் நூலில் நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்துப்பாடும் திறம் நோக்கத்தக்கது. இந்நூற் செய்யுட்களில் அமைந்துள்ள ஐந்தைந்து பொருள்களும் திரிகடுகத்தில் உள்ளது போலத் தெளிவுபட விளக்கமாக அமையவில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைக் குறிப்பு பதினைந்து இடங்களிலேதான் உள்ளது (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83, 92, 92) இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன. 85-முதல் 89 வரை உள்ள ஐந்து பாடல்கள் பல பிரதிகளில் காணப்பெறவில்லை. ஆனால் புறத்திரட்டில் இந்நூலைச் சார்ந்த மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. அவை விடுபட்ட இந்தப் பாடல்களாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆதாரமின்மையால் அவை மிகைப் பாடல்களாக தனியே தரப்பட்டுள்ளன. 


எடுத்துக்காட்டு உவமை அணி விளக்குவதற்காக
உவமையணி
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது.
ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது.
தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது
உவமையணி மூன்று வகைப்படும்.
அவையாவன: பண்பு உவமையணி, தொழில் உவமையணி, பயன் உவமையணி
 
பண்பு உவமையணி
உதாரணம்: குத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.

தொழில் உவமையணி
உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம், தாவும் மனம். 
பயன் உவமையணி
உதாரணம்: மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
 
உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.
 
உவமானம்
ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்
உவமேயம்
ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்
உவமை உருபுகள்
உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய
பொதுத்தன்மை
இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இங்கு,
உவமானம்                :           அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்                 :           தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு           :           போல
உவமைத்தொகை
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.
உதாரணம்: கயல்விழி - கயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.

மதிமுகம் - மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
1- எடுத்துக்காட்டு உவமையணி

2-
இல்பொருள் உவமையணி

எடுத்துக்காட்டு உவமையணி
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.    (அதிகாரம்:கல்வி குறள் எண்:396)
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.

இல்பொருள் உவமையணி
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.

சிறுபஞ்சமூலம் பாடலைப் போல உள்ள நல்வழிப்பாடல்

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்
குரைத்தாலுந் தோன்றா துணர்வு. (35)

பூ பூக்காமலேயே காய் காய்க்கும் மரங்களும் உள்ளன. அதுபோல பெற்றெடுத்த பிள்ளைகளுக்குள்ளேயும் தாய் தந்தையர் ஏவாமல் அவர்களின் குறிப்பினை அறிந்து நடந்துகொள்ளும் மக்களும் உள்ளனர். (பொதுவாழ்வில், பிறர் குறிப்பறிந்து நடந்துகொள்ளும் மக்களும் உள்ளனர்) 
தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உண்டு. அதுபோல, நன்கு எடுத்துச் சொன்னாலும் பேதைக்கு அறிவு தோன்றாது.

நாறா = நாற்றாக முளைக்காத
தூவா விரைத்தல் = தூவி விதைத்தல்

பொருள்

பூவாதே காய்க்கும் மரமும் உளமக்கள் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே, தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLFUSj6KWGqZUNAnfMRc12NiflvEFqexW9kPa0LHI1xaJErk6uOCTp8VAUZKdBriGdzC65ZIMBujSggWsZPr1K8RpfdQQ293pJnsprRfrvxbTeI5WMXjOhhUiNMgm91Jhl3XOVXfknvio1/s1600/athi.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9uoF2ibk7Cj2drgyFDaAOlYrayY5ZPuKKZeuYQUhuDS3XmW5z6L_LoQ0uuUo1yxZpoR3STfd_OkpoHuRO5FesyDrviaKQ6SxCGZCHbuFIVFjyewKCc0bGjHvbKD7yxf2YMXedJGye2-PH/s320/1-4.jpg

பூக்காமல் காய்க்கும் அத்தி மரம்                                                                                             ஆலமரம்

வகுப்பு 10 


தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் இயல் 7


தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

“அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றவர் – திருவள்ளுவர் 

வானியல் அறிவு : 

பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிவடைந்திருப்பதை ஆழமாக விளக்கும் திருவாசகப்பாடல் “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்...” என்பதாகும். உலகம் என்ற தமிழ்ச்சொல் “உலவு” எனும் சொல்லின் அடியாகப் பிறந்தது. உளவு என்றால் சுற்றுதல் எனப் பொருள். ஞாலம் என்ற தமிழ்ச்சொல் “ஞால்” எனும் சொல்லின் அடியாகத் தோன்றியது. ஞால் என்றால் தொங்குதல் என்று பொருள். வானத்தில் காற்று இல்லாப் பகுதி உண்டென்பதை உணர்த்தும் புறநானூற்றுப் பாடல் “வறிது நிலைஇய காயமும்” (புற-30) என்பதாகும். 

பொறியியல் அறிவு: 

“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த....” எனும் பதிற்றுப்பத்து பாடல் அன்றே கரும்பைப் பிழிந்திட எந்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை புலப்படுத்துவதாகும். “அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” எனும் பெருங்கதை வரியானது அக்காலத்திலேயே ஆழ்துளைக் கிணறு இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. கிரேக்கத் தொன்மத்தின் டிராய் போரின் எந்திரக்குதிரைக்கு ஒப்பாக குறிப்பிடப்படும் “எந்திரயானை” இடம் பெற்ற நூழ் “பெருங்கதை” ஆகும். 

கனிமவியல் அறிவு: 

“ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்.. 
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்” 
எனும் சிலப்பதிகாரப் பாடல் ஐவகை மணிகளும் ஒளிவிடும் திரத்தினால் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருப்பினும் அவற்றின் மூலப் பொருள் ஒன்றே எனக் குறிக்கிறது. 

மண்ணியல் அறிவு: 

வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்ப தமிழர் பிரித்திருந்தனர். அவையே ஐவகை நிலங்கள் ஆகும். ஐவகை நிலங்களுக்கும் உரிய உணவு, விலங்கு, பறவை போன்றவற்றை தமிழர் பகுத்தும் வகுத்தும் வைத்துள்ளனர். மேலும் நிரத்தின் அடிப்படையில் செம்மண்நிலம் என்றும் (செம்புலப் பெய நீர் போல-குறுந்தொகை), சுவையின் அடிப்படையில் உவர்நிலம் என்றும் (அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்-புறநானூறு) மற்றும் தன்மையின் அடிப்படையில் களர்நிலம் என்றும் (பயவாக் களரனையர் கல்லாதவர் –திருக்குறள்) என்றவாறு வகைப்படுத்தினர். 

அணுவியல் அறிவு: 

“அனுவைத் துளைத்து ஏழ்கடல் புகட்டி” என்ற ஔவையாரின் வரியிலும், “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” எனும் கம்பரின் வரியிலும் அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என்ற கருத்தை எடுத்துரைப்பதாகும். 

நீரியல் அறிவு: 

“நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்” 
எனும் வள்ளுவ பெருந்தகை உரைப்பது நீரானது ஆவியாகி விண்ணைச் சென்று பின் மழையாக மண்ணிற்கு வரும் சுழற்சி அறிவியல் கண்ணோட்டம் பெற்றவையாகும். 

மருத்துவ அறிவு: 

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” 
எனும் திருமூலர் கூற்று உயிர் இருக்கும் வரைதான் உடல் பயணம் மேற்கொள்ளும் என்பதாகும். மருந்து எனும் அதிகாரத்தை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். சித்த மருத்துவம் என்பது பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவமாகும். “புல்லாகி பூடாகி..” எனும் திருவாசக வரிகள் பரிணாம வளர்ச்சியை விளக்குபவை ஆகும். 
“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி 
உடல்உரச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”..... எனும் கம்பரின் வரிகள் அறுவை சிகிச்சை மருத்துவத்தை மெய்ப்பிக்கும் வரிகளாகும்.

Thursday, October 4, 2018


9ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம்.....
கல்வியில் சிறந்த பெண்கள்  - சிறுதேர்வு
சரியான விடையைத் தெரிவு செய்க.1.     படிக்க வேண்டும் பெண்ணே – அப்பத்தான்
பார்முழுதும் போற்றிடும் கண்ணே ….. பாடல் வரியில் பார் என்பதன் பொருள் என்ன?
அ) பார்த்தல்                     ஆ) உலகம்                         இ) குடும்பம்                      ஈ) பல்கலைக்கழகம்2.     பாட்டும் தொகையும் என்பது
அ) சங்க இலக்கிய நூல்கள்          ஆ) பக்தி இலக்கிய நூல்கள்       
இ) நீதி நூல்கள்                               ஈ) பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்3.     சரியான அகர வரிசையைக் கண்டறிக.
அ) காக்கைப் பாடினியார், வெள்ளி வீதியார், பொன்முடியார், நப்பசலையார்.ஆ) வெள்ளி வீதியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார், நப்பசலையார்,இ) காக்கைப்பாடினியார், நப்பசலையார், பொன்முடியார், வெள்ளிவீதியார்.ஈ) பொன்முடியார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், நப்பசலையார்.4.     சரியான இணையைக் கண்டறிக
அ)          ஹண்டர் குழு                                  -             மருத்துவர்               ஆ)         முத்துலெட்சுமி                               -             சட்டசபை உறுப்பினர்               இ)          ஐடாஸ் ஸ்கட்டர்                                            -             சத்யார்த்தி                 ஈ)           இராஜேஷ்வரி                                  -             சாவித்ரிபாய்பூலே
                                                                                          -             கைவல்யம்5.     தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ஆவார் – விடைக்கேற்ற சரியான வினாவைக் கண்டுபிடி.
அ) முதல் பெண் மருத்துவர் என்றழைக்கப்பட்டவர் யார்?ஆ) முத்துலெட்சுமி எந்த நாட்டின் மருத்துவர்,இ) தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?ஈ) முத்துலெட்சுமி எவ்வாறு அழைக்கப்பட்டார்?6.     சரியான சொற்றொடரைக் கண்டறிக.
அ) பெண்கள் உயர்கல்விக் கற்று அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.ஆ) பெண்கள் உயர்க்கல்வி கற்று அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.இ) பெண்கள் உயர்கல்வி கற்று அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.ஈ) பெண்கள் உயர்கல்விக் கற்று அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.7.     சரியான குழுவைக் கண்டறிக.
அ) ஒக்கூர் மாசாத்திளார், நப்பசலையார், முத்துலெட்சுமி, மலாலாஆ) ராமாபாய், முத்துலெட்சுமி, இராஜேஸ்வரி, சாவித்ரிபாய்பூலேஇ) சாவித்ரிபாய்பூலே, வெள்ளிவீதியார், நீலாம்பிகை அம்மையார், மூவலூர் ராமாமிர்தம்ஈ) நப்பசலையார், ஔவையார், பண்டிதராமாபாய், காவற்பெண்டு.
8.     எடுத்தால் குறைவது…………………, கொடுத்தால் வளர்வது………………..
அ) கல்வி, செல்வம்          ஆ) செல்வம், வீரம்           இ) கல்வி, வீரம்  ஈ) செல்வம், கல்வி9.     “முப்பெண்மணிகள் வரலாறு’ என்ற நூலை எழுதியவர் யார்?
அ) மூவலூர் ராமாமிர்தம்            ஆ) இராஜேஸ்வரி அம்மையார்
இ) நீலாம்பிகை அம்மையார்       ஈ) மறைமலையடிகள்.10.   மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் திருமண உதவித்தொகைக்கான கல்வித்தகுதி……………….
அ) பத்தாம் வகுப்பு          ஆ) ஒன்பதாம் வகுப்பு                   இ) 12 ஆம் வகுப்பு           ஈ) எட்டாம் வகுப்பு  விடைகள்1.       ஆ) உலகம்
2.       அ) சங்க இலக்கிய நூல்கள்
3.       இ) காக்கைப்பாடினியார், நப்பசலையார், பொன்முடியார், வெள்ளிவீதியார்.
4.       ஆ) முத்துலெட்சுமி                               -             சட்டசபை உறுப்பினர்
5.       இ) தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
6.       இ) பெண்கள் உயர்கல்வி கற்று அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.
7.       ஆ) மலாலா, முத்துலெட்சுமி, இராஜேஸ்வரி, சாவித்ரிபாய்பூலே
8.       ஈ) செல்வம், கல்வி
9.       இ) நீலாம்பிகை அம்மையார்
10.    ஈ) எட்டாம் வகுப்பு
       



கல்வியில் சிறந்த பெண்கள்
செயல்பாடு
            சாதனைப் படைத்த இந்தியப் பெண்களின் புகைப்படங்களை மாணவர்களிடம் காட்டி அவர்களின் சாதனைகளைக் கூறச்செய்தல். இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் சாதனை செய்தவர்கள்.
http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/mother-teresa-650-x-350_070115120922.jpghttp://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/indira-gandhi-650-x-350_070115120922.jpg


http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/pratibha-patil-650-x-350_070115120922.jpg



http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/justice-m_070115120922.jpghttp://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/kalpana-chawla-650-x-350_070115120922.jpg




http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/kiran-bedi-650-x-350_070115120922.jpg
http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/sania-mirza-650-x-350_070115120954.jpg



http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/saina-nehwal-650-x-350_070115120954.jpg





http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/mary-com-650-x-350_070115120922.jpghttp://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/bachendri-pal--650-x-350_070115120922.jpg



http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/mrs-anna-malhotra-650-x-350_070115120922.jpg
http://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/harita-deol-650-x-350_070115120922.jpghttp://media2.intoday.in/indiatoday/images/stories/2015JUNE/women-ahead-of-their-time-priya-650-x-350_070115120954.jpg












                                                                         
























இவர்களோடு இன்றைய சாதனைப் பெண்களின் புகைப்படங்களையும் காட்டலாம்.




1.      Mother Teresa: She became the first Indian woman to win a Nobel Peace Prize in 1979. Mother Teresa founded the Missionaries of Charity, a Roman Catholic religious congregation, giving her life to social work.progress in the field of politics, arts, science, law etc.

2.      Indira Gandhi: She became the first woman Prime Minister of India and served from 1966 to 1977. Indira Gandhi was named as the "Woman of the Millennium" in a poll which was organised by BBC in 1999. In 1971, she became the first woman to receive the Bharat Ratna award.
3.      Pratibha Patil: She became the first woman President of India and held office from July 2007 to July 2012.
4.      Kalpana Chawla: She became the first Indian woman in space. The first time Kalpana Chawla went into space on a space shuttle was in 1997 as a mission specialist and a primary robotic arm operator.
5.      Kiran Bedi: Joining Indian Police Service (IPS) in 1972, Kiran Bedi became the first woman officer in India. Moreover, later in 2003, Kiran Bedi also became the first woman who was appointed as the United Nations Civil Police adviser.
6.      Kiran Bedi: Joining Indian Police Service (IPS) in 1972, Kiran Bedi became the first woman officer in India. Moreover, later in 2003, Kiran Bedi also became the first woman who was appointed as the United Nations Civil Police adviser.
7.      Sania Mirza: The professional tennis player became the first ever Indian woman to win a Women's Tennis Association (WTA) title in 2005. Later in 2015, Sania Mirza became the first Indian woman to be ranked no. 1 in WTA's double rankings.
8.      Saina Nehwal: Currently ranking no. 2 in the World, Saina Nehwal became the first Indian to win  a medal in Badminton at Olympics in 2012. Later in 2015, she became the first Indian woman to become no. 1 in World ranking.
9.      Mary Kom: Mangte Chungneijang Mary Kom, also known as Mary Kom is the only woman boxer who has won a medal in each of the six World Championships. She was the only Indian woman boxer who qualified for the 2012 Olympics and became the first Indian woman boxer to win a gold medal in Asian Games in 2014.
10.   Bachendri Pal: In 1984, Bachendri Pal became the first Indian woman to reach the summit of Mount Everest. Later, she led expeditions in 1993, 1994 and 1997 with a team comprising of only women in Indo-Nepalese Women's Mount Everest Expedition, The Great Indian Women's Rafting Voyage and First Indian Women Trans-Himalayan Expedition.
11.   Anna Malhotra: Anna Rajam Malhotra became the first woman IAS officer of India.
12.   Harita Kaur Deol: Flight Lt. Harita Kaur Deol was a pilot in the Indian Air Force. She became the first woman pilot to fly solo in the Indian Air Force, in 1994.
13.   Priya Jhingan: With a dream to be in the Indian Army, Priyan Jhingan became the first Indian woman to join the Indian Army in 1993.